Thursday 29 December 2011

காதல் தோல்வி

உனக்காக பறித்த புது மலர்
அதன் இதழ்கள் வாடும் முன்பே
என் இதயம் வாடிவிட்டது

காலை உதிக்கும் சூரியன்
வானின் உச்சிக்கு வரும் முன்
என் இதயம் சுட்டுப்பட்டு விட்டது

டக் டக் என்ற கடிகாரத்தின் ஓசை
நிற்பதற்கு முன்னரே என்
இதய ஓசை நின்றுவிட்டது

திரண்ட கருமேகம் ஒன்றாகி
மழை வரும் முன்பே என்
இதய வானம் இருண்டு விட்டது

கடல் அலை கரையை முத்தமிடு முன்பே
என் உடல் சரிந்து மண்ணை முத்தமிட்டது
இவையெல்லாம் ஏன் தெரியுமா
நீ என்னை I hate you என்றதால்

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...