Thursday 29 December 2011

பூக்கள்

சின்ன சின்ன பூக்கள்

சிரிப்பை உதிர்க்கும் பூக்கள்


ஒருநாள் வாழும் பூக்கள் -வாழ்வின்

உண்மை உரைக்கும் பூக்கள்


வண்டுக்குத் தேன் தரும் பூக்கள்

வாசமாய் வலம் வரும் பூக்கள்


காதலின் முதல் படி பூக்கள்-வென்றபின்

கழுத்தில் மாலையாய் விழுவதும பூக்கள்


பூஜையில் இருப்பதும் பூக்கள்

பூமியின் தேவதைகள் பூக்கள்


மனதை கொள்ளை கொள்ளும் பூக்கள்

மங்கையின் கூந்தலிலும் பூக்கள்


வாய் பேசாத பூக்கள் ஏழையின்

வறுமை தீர விற்றுத் தீரும் பூக்கள்

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...