Thursday 29 December 2011

ரசனை

ஆடி வரும் கடல் அலை ரசித்தேன்

ஓடி வரும் மேகங்கள் ரசித்தேன்

பூமியில் விழும் மழைத்துளி ரசித்தேன்

பூத்துக் குலுங்கும் மலர்களை ரசித்தேன்

காலையில் உதிக்கும் கதிரவன் ரசித்தேன்

மாலையில் பறக்கும் பறவைகள் ரசித்தேன்

பசுமையான வயல்வெளி ரசித்தேன்

பாய்ந்து ஓடும் நதியினை ரசித்தேன்

தோகை விரிக்கும் மயிலை ரசித்தேன்

அழகாய் பாடும் குயிலை ரசித்தேன்

நீ உள்ளதால் இந்த உலகையே ரசித்தேன்

நீ கனவில் வருவதால் உறக்கம் ரசித்தேன்

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...