Thursday 29 December 2011

உழைப்பாளி

உழைக்கத் தெரிந்தவனுக்கு
உயர்வடையத் தெரியவில்லை

மூட்டைகளைத் தூக்குகிறான்
முன்னுக்கு வருவதில்லை

சேரும் பணத்தை
சேமிக்கத் தெரியவில்லை

குடிக்கசெலவிடும் பணத்தை
குடும்பத்துக்கு கொடுப்பதில்லை

பீடிக்குப் பஞ்சமில்லை
பிள்ளைக்கும் பஞ்சமில்லை

மனைவிக்கும் பஞ்சமில்லை-சமூகத்தில்
மரியாதை சிறிதும் இல்லை

பிழைக்க வழியில்லை
பிள்ளை ஒருபக்கம்

மனைவி ஒரு பக்கம்
மருகி நிற்கின்றான் அவன் வாழ்க்கை
மலர்வது எப்போது?

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...