Thursday 29 December 2011

பிரிவின் துன்பம்

அன்பை ஊட்டி வளர்த்த
அன்னையே உன் பிரிவால் நான்
அடிமையாய் கிடக்கின்றேன்
அனாதையாய் இருக்கின்றேன்
ஆறுதல் சொல்லக்கூட ஆளில்லை
அல்லல் படுகின்றேன்
ஆறுகள் நிரம்பி ஓடினால்
அணைபோட்டு தடுப்பதைப்போல் நான்
ஆத்திரம் கொண்டாலும் நீ
அன்புமழை பொழிந்திடுவாய்
ஆருயிர் அன்னையே உன்
ஆத்மாவை எனக்கு விட்டுச் சென்றாய்
அன்பின் அர்த்தம் அன்னையே நீ
அருகில் இருந்த போது உன்
அருமை தெரியவில்லை நீ
மறைந்த பின் தான் உன்
மாண்பு தெரிகிறது
மண்டியிட்டுக் கேட்கிறேன் என்
மகளாய் நீ பிறப்பாயா?

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...