Thursday 29 December 2011

அழகு மழலையே!

வானத்து வெண்ணிலவே
நீ பிறந்தாய்
தவழும் பெண்ணிலவாய்

ஒரு கோடி விண்மீன்களில்
நீ பிறந்தாய்
ஒளிவீசும் சூரியனாய்

துன்பமெனும் துயர் துடைக்க
நீ பிறந்தாய்
தூய விடிவெள்ளியாய்

வாடா நறுமலராய்
நீ பிறந்தாய்
வாழ்கை எனும் பூந்தோட்டத்தில்

ஆனந்த வெள்ளமாய்
நீ எங்களை ஆட்கொண்டாய்
அழகு மழலையே!

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...