Thursday 29 December 2011

திருப்பம்

உன் விடியலைக் காண

விடியற்காலையில் உன்

வீட்டு வாசலில் வீழ்ந்து கிடக்கின்றேன்

நீ வருவாயா?

உன் புன்னகை காண

பூக்களை நான் மறந்து

புத்தம் புதிதாக புல்லரித்து நிற்கின்றேன்

நீ வருவாயா

உன் அழகைக் காண

இந்த அண்டமும் நான் மறந்து

ஆவலோடு காத்துக் கிடந்தேன்

நீ வருவாயா?

நீயும் வந்தாயடி

கழுத்தில் தாலியோடு

என் இதயம் சுக்குநூறாகி

திரும்பி நடந்தேனடி.

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...