Thursday 29 December 2011

இன்றைய சூழல்

வாய்மை வெல்லும் வாய்மை வெல்லும் என்று

வாய் கிழிய கத்தினேன்-இன்றைய சூழலில்

என் வாய் வலித்ததுதான் மிச்சம்


அச்சமில்லை அச்சமில்லை என

அறைகூவல் விடுத்தேன்-இன்றைய சூழலில்

நான் அடங்கிப் போனதுதான் மிச்சம்


மடமை வேண்டாம் மடமை வேண்டாமென

மன்றாடி நின்றேன் -இன்றைய சூழலில்

நான் மல்லுக்கட்டியதுதான் மிச்சம்


ஞானம் வேண்டும் ஞானம் வேண்டும் என

ஞாயிறாய் சுற்றினேன் -இன்றைய சூழலில்

நான் நானாகவே இருந்தால் போதுமென புரிந்தேன்

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...