Thursday 29 December 2011

அழகின் அழகு

பச்சை நிற மூங்கில் மேல்
பாடித்திரிந்த பைங்கிளியே அவள்
பைந்தமிழ் மொழி கேட்டு நீ
பேச மறந்தாயோ

வண்ண மலர்களை தேடி
பறந்து திரியும் கருவண்டே
அவள் பாதம் கண்டு வெண் மலரோ என்று
தேனெடுக்க தொடர்ந்தாயோ

பச்சை புல்விழி மீது
படுத்துறங்கும் பனிநீரே
அவள் வரவு கண்டு
ஆதவனோ என்று நீ ஓடி ஒளிந்தாயோ

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...