Thursday, 29 December 2011

ஆசை கடலலை

ஆசை
கடலலை போன்றது
எப்போதும் ஓயாது
அடித்துக் கொண்டே இருக்கும்
இன்பம்
மலரைப் போன்றது
ஒருநாள் மட்டுமே வாழ்ந்துவிட்டு
வாடி மறைந்துபோகும்
அன்பு
குறிஞ்சி மலரைப் போன்றது
எப்போதாவது பூத்து உனைத்
தழுவி சென்றுவிடும்
துன்பம்
சூரியனைப் போன்றது
எப்போதும் உன்னை
சுட்டுக் கொண்டே இருக்கும்
பொய்
கானல் நீரைப் போன்றது
அருகில் செல்லச் செல்ல
மறைந்து போவதுதான் மிச்சம்.
இல்வாழ்க்கை
தண்டவாளம் போன்றது
இணைந்து சென்றால்தான் லட்சியம்
எனும் இடத்தை அடைய முடியும்

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...