Thursday 29 December 2011

என்னவளே

என்னவளே
பெண்களை நிலவு என்கிறார்கள்
நான் மட்டும் உன்னை
சூரியன் என்கிறேன்
ஏன் தெரியுமா
நிலவென்றால் மாதத்தில்
பாதிநாள் தேய்ந்து விடும்
நிலவின் ஒளி இரவல்
சூரியனோ தேய்வதில்லை
சுயமாக ஒளிருகிறது
நெருப்பாக மிளிருகிறது
நீயும் அப்படித்தான்
தானாக அழகொளி வீசும் தேவதையே
தகாதவர்களை சுட்டெரிக்கும் நெருப்பே
எனக்கு மட்டும் உன் வெப்பத்தை நீக்கி
என்றும் உன் ஒளியை தருவாயா?

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...