Thursday 29 December 2011

களைப்பும் களிப்பும்

ஏற்றம் பிடித்த கையால்

ஏர் உழுத களைப்பால்

அலுப்புடன் காத்திருந்தேன்

அவள் வருகையை நோக்கி


வயல்வெளி ஓரத்தில்

அன்னம்போல் நடந்து

அன்னக்கூடையுடன்

அழகுடனே அவள் வந்தாள்


கொஞ்சிப்பேசவில்லை

கெஞ்சியது வயிறு

கொஞ்சம் பருகினேன்

கொண்டுவந்த கஞ்சியை


முத்துக்கள் என் நெற்றியிலே

முந்தானையால் துடைத்தாள்

முத்துப்பல் தெரியும் முறுவலில்

முழுநிலவாய் தெரிந்தாள்

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...