பாதையில் பதிந்திருக்கும் உன்
பாதச் சுவடுகளை
பார்த்தால் பாவலனுக்கு
பாடல் எழுத தோன்றுமடி
கண்களை தொட்டு செல்லும் உன்
கார்குழல் கேசம் கண்டால்
கன்னி உன் அழகை
கவி எழுத தூண்டுமடி
சிறு மலராய் விரிந்த உன்
சிங்கார வதனத்தின்
சிரிப்பைக் கண்டால் சிற்பிக்கும்
சிலை வடிக்கத் தோன்றுமடி
மாசு மறுவற்ற உன்
மழலை உள்ளத்தை கண்டால்
மங்கை உன்னை என்
மனதில் குடியேற்றத் தோன்றுதடி
பாதச் சுவடுகளை
பார்த்தால் பாவலனுக்கு
பாடல் எழுத தோன்றுமடி
கண்களை தொட்டு செல்லும் உன்
கார்குழல் கேசம் கண்டால்
கன்னி உன் அழகை
கவி எழுத தூண்டுமடி
சிறு மலராய் விரிந்த உன்
சிங்கார வதனத்தின்
சிரிப்பைக் கண்டால் சிற்பிக்கும்
சிலை வடிக்கத் தோன்றுமடி
மாசு மறுவற்ற உன்
மழலை உள்ளத்தை கண்டால்
மங்கை உன்னை என்
மனதில் குடியேற்றத் தோன்றுதடி
No comments:
Post a Comment