Thursday, 29 December 2011

தந்தையும் மகனும்

விளக்கு எனும் தேகம் பூண்டு அதில்
தசை நரம்பு எனும்
பாசக்யிறுகளை திரியாக்கி
உழைப்பு எனும்
குருதி எண்ணையில் நனையவிட்டு
சுடர் எனும் இன்ப வெள்ளத்தை
குறையாமல் கொடுத்துவந்தான்
தந்தை தன் ஆசை பிள்ளைக்கு

பிள்ளையோ சம்சாரம் எனும்
மின்சாரம் கொண்டு
பித்தம் எனும்
பிளக் பாயின்ட் மாட்டி
கொடுமை எனும்
குழல் பல்புகளை தொங்கவிட்டு
கூலாக உலா வந்தான்
விளக்கான தந்தையை
ஊதித் தள்ளிவிட்டு.

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...