Thursday 29 December 2011

நினைவுகள்

மண் என்னும் உடல் கொண்டு -அதில்
இதயம் எனும் விதை கொண்டு-அதில்
செந்தளிர்கள் எனும் உன் நினைவுகளை
நான் காப்பாற்றி வளர்த்தேன்

நீயோ உன் நெருப்பு போன்ற பார்வையால்
அதனை பட்டுப் போகச் செய்யாதே
உந்தன் வறட்டு குணத்தால்
அதனை வாடிப் போகச் செய்யாதே

உன் அன்பு புன்னகையில் மட்டும்
என்னை நனைய விட்டு
உன் அரவணைப்பில் அதனை
துளிர்விடச் செய்வாயா

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...