ஓயாத தென்றலாய்
ஒளி கொடுக்கும் நிலவாய்
ஓங்கி நிற்கும் மலையாய்
ஒய்யார கீத மழையாய்
ஓடி விளையாடும் கடலாய்
ஒட்டிக்கொள்ளும் பசையாய்-என்மனதில்
ஒளிந்துகொண்டவளே
என்னென்று சொல்லுவேன்
எப்படிச் சொல்லுவேன்
என் இனியவளே உன்னைப்பற்றி!
இரவெல்லாம் விழித்திருந்து
பகலெல்லாம் உழைத்திருந்து
அழியாத சூரியனாய்
அழகில் நீ சந்திரனாய்
கண்ணின் மணியைப் போல
என்னை நீ காத்தாயே
என்னென்று சொல்லுவேன்
எப்படிச் சொல்லுவேன்
என் அன்பே உன்னைப்பற்றி!
ஒளி கொடுக்கும் நிலவாய்
ஓங்கி நிற்கும் மலையாய்
ஒய்யார கீத மழையாய்
ஓடி விளையாடும் கடலாய்
ஒட்டிக்கொள்ளும் பசையாய்-என்மனதில்
ஒளிந்துகொண்டவளே
என்னென்று சொல்லுவேன்
எப்படிச் சொல்லுவேன்
என் இனியவளே உன்னைப்பற்றி!
இரவெல்லாம் விழித்திருந்து
பகலெல்லாம் உழைத்திருந்து
அழியாத சூரியனாய்
அழகில் நீ சந்திரனாய்
கண்ணின் மணியைப் போல
என்னை நீ காத்தாயே
என்னென்று சொல்லுவேன்
எப்படிச் சொல்லுவேன்
என் அன்பே உன்னைப்பற்றி!
No comments:
Post a Comment