Friday 30 December 2011

இனிமை

ஓயாத தென்றலாய்

ஒளி கொடுக்கும் நிலவாய்

ஓங்கி நிற்கும் மலையாய்

ஒய்யார கீத மழையாய்

ஓடி விளையாடும் கடலாய்

ஒட்டிக்கொள்ளும் பசையாய்-என்மனதில்

ஒளிந்துகொண்டவளே

என்னென்று சொல்லுவேன்

எப்படிச் சொல்லுவேன்

என் இனியவளே உன்னைப்பற்றி!

இரவெல்லாம் விழித்திருந்து

பகலெல்லாம் உழைத்திருந்து

அழியாத சூரியனாய்

அழகில் நீ சந்திரனாய்

கண்ணின் மணியைப் போல

என்னை நீ காத்தாயே

என்னென்று சொல்லுவேன்

எப்படிச் சொல்லுவேன்

என் அன்பே உன்னைப்பற்றி!

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...