Friday 30 December 2011

வெற்றியின் வாசல்

இதம் எனும் நான்கெழுத்தில்

இதம் எனும் சுகம் ஒளிந்திருக்கிறது

அதைப் புரிந்து கொண்டால்

இதமாய் வாழலாம் என்றும் வாழ்வினிலே.


வாழ்க்கை எனும் படகினிலே

வாகை எனும் வெற்றி ஒளிந்திருக்கிறது

அதைப் பிடித்துவிட்டால்

சுகமாய் வலம் வரலாம் என்றும் வாழ்வினிலே.


ழைப்பு எனும் உயர்வினிலே

உப்பு நீர் எனும் வியர்வை ஒளிந்திருக்கிறது.

அதை வெளியேற்ற வெளியேற்ற

பிரகாசமாய் சுடர் விடலாம் என்றும் வாழ்வினிலே.

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...