Tuesday 27 December 2011

கனவு கண்டேன்

கனவு கண்டேன் -நான்
கனவுகண்டேன்  அந்த
கனவில் ஓர் புதுமை
காட்சி கண்டேன்

தமிழகம் எங்கள் தேசம்  அன்னைத்
தமிழ்மொழி எங்கள் சுவாசம்  
வந்தோரை வாழவைத்த எங்கள்
வளமை மிகு தமிழ்த்திரு நாட்டில்

அன்பு பண்பு மலர்ந்திருக்கும்
அறிவும் அழகும் நிறைந்திருக்கும்
அன்னையை என்றும் மதித்திருக்கும் எங்கள்
அன்புத் தமிழ்த்திரு நாட்டில்

கடமை என்றும் தவறாமல்
கருணை என்றும் குறையாமல்
கடலைப் போல விரிந்திருக்கும் எங்கள்
கன்னித்  தமிழ்த்திரு நாட்டில்  

போட்டிகள் ஏதுமில்லை
பொறாமை வந்ததில்லை
பெரியோரைப் போற்றும் எங்கள்
பொன்னிகர் தமிழ்த்திரு நாட்டில்


நீருக்காக சண்டையில்லை
நித்தம் விளைச்சலுக்குப் குறைவில்லை  
நிம்மதிக்குப் பஞ்சமில்லை என்று வாழும்
நிலைமை எம் மக்களுக்கு நிலைக்கும் என் கனவு
நிஜமாகும் நாள் எந்நாளோ

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...