Thursday 29 December 2011

வாழ்வில் உயர.

ஆசை எனும் தீயை அணைத்து
ஆமை போன்ற உழைப்பை துரிதப்படுத்தி
அடிமை எனும் சங்கிலியை உடைத்தெறிந்து
அன்பு எனும் பாசவலை கொண்டால்
அகிலம் வணங்கும் உன்னை
இறுமாப்பு எனும் மனத்திரையை விலக்கி
இதயம் எனும் கோயில் கட்டி அதில்
உண்மை எனும் திரி போட்டு
உழைப்பு எனும் தீபம் ஏற்றினால்
உலகம் மதிக்கும் உன்னை
உயர்வடையலாம் உன் வாழ்வில்

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...