Thursday, 29 December 2011

மாலை வெயில்

தென்றலை நான் சுவாசிக்க கடற்கரைக்குச் சென்றேன்

அதுவோ உன் சுவாசத்தில் இருக்கிறது


நறுமணத்தை நான் நுகர பூந்தோட்டம் சென்றேன்

அதுவோ உன் மேனியில் இருக்கிறது


கார்முகிலை நான் காண சிரபுஞ்சி சென்று வந்தேன்

அதுவோ உன் கூந்தலில் இருக்கிறது


நிலாவை நான் தொட்டுவிட வானுலகம் சென்று வந்தேன்

அதுவோ உன் நெற்றியில் இருக்கிறது


கோவைப்பழம் நான் கொண்டுவர கொடும் பயணம் சென்று வந்தேன்

அதுவோ உன் இதழில் இருக்கிறது


மாலை வெயில் சூரியனை மாலையிட நான் முயன்றேன்

அதுவோ என் பக்கத்திலேயே இருக்கிறது.

No comments:

Post a Comment

கடவுள்

வெளியில் தேடும் இறைவன் உன் உள்ளத்தில் உறைகின்றான் என்பதை நீ அறிவாயோ ஆலயம் வரை செல்லும் நீ அன்பின் வடிவாய் ஆண்டவன் இருக்கின்றான் என்பதை உ...